சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு!
சர்க்கரை நோய் என்றால் என்ன? உடலில் சர்க்கரையை கையாளும் முறையில் குறைபாடு ஏற்பட்டு அதனால் ரத்த சர்க்கரை அளவு மிகுந்து காணப்படுவதே சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோய் என கூறப்படுகிறது. சர்க்கரை நோய் ஏன் வருகிறது? பொதுவாக சர்க்கரை நோய் இரண்டு வகைப்படும். டைப் 1 என்பது உடலில் இன்சுலின் சுரக்காத காரணத்தால் ஏற்படுவது (இன்சுலின் மட்டுமே தீர்வு) டைப் 2 என்பது தவறான உணவு முறை, வாழ்க்கை முறை, மரபணு குறைபாடு, உடல் பருமன் என பல காரணங்களால் வருவது, இன்சுலின் சுரக்காமல் இன்சுலின் குறைவு காரணமாக இருக்கலாம் அல்லது இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் (தடுப்புத்தன்மை) என்னும் குறைப்பாட்டினால் கூட இருக்கலாம். (இனி சர்க்கரை நோய் இரண்டாம் வகை (டைப் 2) மட்டும் காண்போம்) சர்க்கரை நோய் அறிகுறிகள் என்ன? உடல் சோர்வு, அதிக முறை சிறுநீர் வெளியேறுவது, அதிக தாகம், அதிக பசி, உடல் எடை திடீரென குறைவது, கண் பார்வை குறைபாடு போன்ற அறிகுறிகள் பொதுவாக காணலாம். எவ்வாறு கண்டுபிடிப்பது? சிறுநீர் பரிசோதனை மற்றும் ரத்த பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கலாம். சாதாரணமாக சிறுநீரில் சுகர் இருக்கக்கூடாது. இருந்தால் ரத்த பர